அறிவியலும் ஆன்மீகமும் உணர்த்தும் சிவபெருமானின் ஆனந்த நடனத் தத்துவங்கள்!

SHARE:




"அவனின்றி அணுவும் அசையாது" என்பர். பஞ்ச பூதங்களாலான இப் பிரபஞ்சமா னது அணுத்துணிக்கைகளின் சேர்க்கை யினாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. அணுக்களின் சேரலிலும் பிரிதலிலும் ஒன்றோடு ஒன்று தொடர்புறுவதிலும் அபரிமித விளைவுகள் ஏற்படுத்தப் படுகின்றன. அணுக் கருவினைச் சுற்றி பல அணுத்துணிக்கைகள் நகர்ந்தவண்ணம் இருக்கும். கருவினை மையமாகக் கொண்ட இவ் அணுத்துணிக்கைகளின் நகர்வானது "அணுத்துகள்களின் நடனங்கள்" (dances of subatomic particles) எனப்படுகின்றது.

இங்கே நடனம் என்னும் சொல்லானது தத்துவரீதியாக கையாளப்பட்டுள்ளது. அதாவது அணு மூலக்கூறுகளின் இடைத் தொடர்பாடலானது இவ்வாறு விளக்கப்பட் டுள்ளது. இதன் அடிப்படையிலேயே சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையமான - சேர்ன் (the European Organization for Nuclear Research - – CERN) ஆராய்ச்சி வளாகத்தில் நடராஜர் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. 2 மீற்றர் உயரமான இச் சிலையானது 1960ஆம் ஆண்டு முதல் தொடர்கின்ற இந்திய அரசாங்கத்துடனான விஞ்ஞான ஆய்வுகளின் நல்லுறவிற்காக இந்திய அரசாங்கத்தினால் அன்ப ளிப்பாக வழங்கப்பட்டது.




இச்சிலையானது 2004ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் திகதி அன்றய CERN இயக்குநர் டாக்டர்் ரொபர்ட் WTO--–Geneva தூதுவர் சந்திரசேகர், மற்றும் இந்திய அணுசக்தி ஆணையக செயலாளார் டாக்டர் அனில் காக்கோதார் ஆகியோரால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இச்சிலையானது மெழுகு மாதிரியினால் உருவாக்கப்பட்டு களி மண் அச்சினால் சூழப்பட்டு பின்னர் அம்மெழுகானது உருக்கப்பட்டவுடன் அவ்விடத்தில் தோன்றும் வெற்றிடமானது திரவ உலோகத்தினால் நிரப்பப்படும். பின்னர் இது குளிரூட்டப்பட்டவுடன் மேற் சூழ்ந்துள்ள களிமண் அச்சு அகன்றுவிடும். பின்னர் சிலையானது மெருகூட்டப்பட்டு முழுமையாக்கப்பட்டுள்ளது.




CERN ஆராய்ச்சி மையத்தின் சில அடிப்படை அறிவியல் விளக்கங்களைப் பார்ப்போமானால் அணுவின் கருவினுள்ளே (nucleus) புரோத்தன்கள் மற்றும் நியுத்திரன்கள் ஆகிய கூறுகள் காணப்படும். இக் கூறுகள் குவார்க்குள் (quarks) என்றழைக்கப்படும் துகள்களினால் ஆக்கப்பட்டிருக்கும். இக் குவார்க்குளில் சில ஏனைய பிரபஞ்சங்களிலிருந்து அதிவேகத்துடன் பூமியை வந்தடைந்தி ருக்கும். சில குவார்க்குகள் அணுக்கள் ஒன்றோடொன்று மோதியதால் உருவாக்கப் பட்டிருக்கும். விஞ்ஞானிகள் இவை பற்றிய விடயங்களை அறிவதற்கான துரிதப்படுத்தி (accelerator) என்னும் கருவிப் பொறிமுறையை உருவாக்கியுள்ளனர். இக் கருவிப் பொறி முறையினுள் அணுத் துகள்கள் ஒரே திசை யிலும் எதிர்த்திசையிலும் வெவ் வேறு வேகங்களில் மோத விடப்பட்டு (collisions) எவ்வாறான விளைவுகள் உருவாக் கப்படுகின்றன என அவதானிக்கப் படுகின்றது. அத்துடன் இச் செயன்முறை யினால் பல புதிய அணுக்கூறுகள் உருவாக் கப்படுவதுடன் சில பழைய அணுக்கூறுகள் அழிக்கப்படுகின்றன. CERN ஆராய்ச்சி மையத்தில் அமைந்துள்ள துரிதப்படுத்தியே (accelerator) உலகிலுள்ள மிகப் பெரிய துரிதப்படுத்தியாகும். இது Large Hadron Collider(LHC) என அழைக்கப்படுகின்றது. நிலத்திலிருந்து 50 மீற்றர் ஆழமான சுரங்கத்துள் 27 கீலோ மீற்றர் சுற்றளவில் இது அமைக்கப்பட் டுள்ளது.




CERN LHC access points இவை பற்றிய ஆய்வுகள் மிக நுணுக் கமானவையும் சிக்கல் நிறைந்தவையு மாதலால் உலகெங்கிலுமுள்ள பல ஆயிரக் கணக்கான விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து இவ் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின் றனர். 2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் CERN மையத்துடன் செய்து கொண்ட ஒப்பந் தத்தின் அடிப்படையில் இலங்கைப் பல் கலைக் கழகங்களிலிருந்து பேராசிரியர்கள் ஆய்வுகளில் பங்குகொள்வது மட்டுமன்றி விஞ்ஞான தொழில்நுட்பத் துறையில் கல் விகற்கும் மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர். அணுத்துணிக்கைகளின் இடைத் தொடர் பாடலின் போது புதியன உருவாக்கப்படு கின்றன. பழையன அழிக்கப்படுகின்றன. நடராஜர் திருவடிவத்தினூடாக விளக்கப்படும் படைத்தலும் அழித்தலும் இவ்வாறே அறிவியலில் விளக்கப்படுகின்றது. அத்துடன் இத் தொழிற்பாடுகளின் போது பெருமளவு சக்திப் பரிமாற்றம் நிகழ்கின்றது. மேலும் CERN மையத்தின் "பிக் பாங்க்" (big bang)என்னும் மற்றுமொரு கற்கையின் படி ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் அமைந்துள்ள பல நட்சத்திர மண்டலங்கள் (galaxies) ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் சென்று கொண்டிருக்கின்றன.




இவ்விளைவானது பல வருடங்களுக்கு முன்பு பிரபஞ்சத்தில் ஏற்பட்ட பாரிய வெடிப்பினால் உருவானது என கருதப்படுகின்றது. இவ்வாறு அணுத் துணிக்கையிலிருந்து பிரபஞ்சத்தின் அசை வுகள் பற்றிய அறிவியலின் அடிப்படை யிலேயே அவனின்றி அணுவும் அசையாது என்பதன் ஆழமான தத்துவத்தை நடராஜர் திருவுருவம் விளக்கி நிற்கின்றது.




வலது கால் ஊன்றி இடது கால் தூக்கி சாத்வீக ராஜரீகத்தின் சொரூபமாக விளங்கும் நடராஜர் என்னும் பதத்தின் அர்த்தம் நடனத்தின் அரசன் என்பதாகின்றது. தாண்டவம், லாஸ்யம் என்பன இதன் இரு நடன வடிவங்களாகும். தாண்டவம் என்பது உக்கிர நடன வடிவமாக அழித்தலுடன் தொடர்புற லாஸ்யம் மென்மையானதாக படைத்தலை விளக்குகின்றது. எனவே இங்கே புதியதொன்றை உருவாக்கவே அழித்தல் இடம்பெறுகின்றது. ஆத்மாவின் மனம் புத்தி சம்ஸ்காரங்களில் புதைந்துள்ள அனைத்து விகாரங்களையும் அகற்றவே பரமாத்மா சிவன் ஞான நடனமாடுகின்றார் என்பது ஆன்மீக சாரமாகும்.












நட­ராஜத் திரு­வ­டிவின் குணாம்­சங்கள்




1. நெருப்புச் சுவா­லை­க­ளினால் ஆன வட்டம் பிர­பஞ்­சத்­தி­னுள்ளே இயக்­கங்கள் அனைத்தும் நடை­பெ­று­வ­தையும் நெருப் பிலி­ருந்து உரு­வா­தலையும் அழி­த்தல் இடம் பெறு­வதையும் குறிக்­கின்­றது. நெருப்­பா­னது இங்கு வெப்பம், ஒளி, சக்தி என வாழ்வின் குதூ­க­ல­மா­கவும் பிர­தி­ப­லிக்­கின்­றது.




2. டம­ருகம் (உடுக்கை) தாங்­கிய தூக்­கிய வலக்­கரம்




காலப்­பி­ர­மாணம், நேரம் என - வாழ்க்­கையின் கணப்­பொ­ழு­து­க­ளி­லேயே மங்­களம், மரணம் இரண்டும் நிகழ்­கின்­றன. காலப்­பி­ர­மாணம் கற்­பிக்கும் வாழ்க்­கையின் அனு­ப­வத்தை நாம் எங்கும் கற்க முடி­யாது.




3. நெருப்­பினைத் தாங்­கிய இடக்­கரம்




படைப்­பி­னதும் அழித்­த­லி­னதும் சக்தி மற்றும் வாழ்வில் நாம் முகம் கொடுக்கும் எதிர்நிலைகள்




4. பாம்­பினால் சூழப்­பட்ட வலது அப­யக்­கரம்




உன்னைச் சுற்­றி­யுள்ள தீய சக்­தி­க­ளாலும் அறி­யா­மை­யி­னாலும் அஞ்­சாதே என்­பதை விளக்­கு­கின்­றது.




5. தூக்­கிய திரு­வ­டி­யினைக் காட்டி நிற்கும் இடதுகரம்




சிவனின் உயர்ந்த வழி­காட்­டல்­களை பின்­பற்­று­வதால் ஆன்ம ஈடேற்­றமும் பந்­த­னங்­க­ளி­லி­ருந்து விடு­த­லையும் கிடைப்­பதைக் குறிக்­கின்­றது.




6. அசு­ரனின் மீது ஊன்­றிய திரு­வ­டியும் தூக்­கிய திரு­வ­டியும்




விகா­ரங்கள் (vices) அறி­யாமை (ignorance) மற்றும் மாயாவின் (illusions) மீதான வெற்றி. அத்­துடன் தாமரை மலரில் திருப்­பா­தங்­களை ஊன்­றியும் தூக்­கியும் இருப்­பது நமது வாழ்­வெனும் சம்­சார சாக­ரத்தை நாம் அன்­பு­டனும் பற்­றற்றும் கடக்க வேண்டும் என்­பதை விளக்­கு­கின்­றது.




7. விரிந்த சடா­முடி




ஆனந்த நட­னத்­தினால் நாம் உணரும் எல்­லை­யற்ற பேரா­னந்­தத்தின் விஸ்­தாரம்.




8. சடையில் தாங்­கிய கங்கா




உயிர்­களின் ஜீவா­தா­ரத்­தையும் புனர் ஜென்­மத்­தையும் குறிக்கும் நீர்.




9. இரு கண்­கள், நெற்­றியில் அமைந்­துள்ள மூன்­றா­வது கண்




இரு­கண்கள் சூரிய சந்­தி­ரர்­க­ளையும் மூன்­றா­வது கண் சுய விழிப்­பு­ணர்­வினால் ஒருவர் உணர வேண்­டிய ஞானத்­தையும் (wisdom) குறிக்­கின்­றது. மேலும் சதோ ரஜோ தமோ குணங்­க­ளையும் கரு­து­கின்­றது.




10. புன்­னகை தவழும் கம்­பீ­ர­மான வதனம்




பிர­பஞ்­சத்தில் வாழும் உயி­ருள்ள ஜீவ­சக்­தி­க­ளி­னதும் பஞ்சபூதங்­களின் செயற்கோலங்­க­ளையும் அனைத்­தையும் அறிந்தும் அறி­யா­மலும் பற்­றற்ற பார்­வை­யா­ளராக (detachment) பார்க்கும் நிலை.




இக்­ கு­ணாம்­சங்­க­ளோடும் தத்­து­வங்­க­ளோடும் அக்­கி­னி­யையும் டம­ரு­கத்­தையும் கைகளில் ஏந்தி அரவம் சுற்­றிய கை அப­ய­ம­ளிக்க தூக்­கிய திரு­வ­டி­யினை மறு கை காட்டி நிற்க முய­லகன் என்னும் அசு­ரனின் மீது வலக்கால் ஊன்றி இடக்கால் தூக்கி சலங்கைகள் அணிந்து முக்கண் திறந்து விரிந்த சடை­யுடன் புன்­னகை தவழ தீச்­சு­வா­லைகள் சூழ உலகின் முழு­முதல் கட­வு­ளான சிவன் படைத்தல் (Creation), காத்தல் (Preservation), அழித்தல் (Destruction) , மறைத்தல்(llusion),அருளல் (Grace) என்னும் ஐந்­தி­யக்­கங்­க­ளையும் நட­ரா­ஜ­ராக ஆனந்த தாண்­ட­வ­மா­டுன்றார் (cosmic dance of Shiva) என ஞானிகள் விளக்­கு­கின்­றனர். இவ்­வாறு இந்­ந­டன தத்­துவம் அழ­கியல் கலை­ஞர்­களால் அற்­பு­த­ நட­ன­மாக ஆடப்­ப­டு­கின்­றது. ''­ந­டனம் ஆன்­மாவில் மறைந்­தி­ருக்கும் மொழி'', இவ்­வாறு மார்தா கிரகம் (1894 –- 1991)என்னும் அமெ­ரிக்க நவீன நட­னக்­க­லைஞர் தாம் நாட்­டி­யத்­தினால் அனு­ப­வித்த சுகா­னு­ப­வத்தை குறிப்­பிட்டுச் சென்றார். உற்று நோக்கின் இக்­க­லையின் மூலம் மனித மனங்­க­ளி­டை­யேயும் இயற்­கை­யி­டை­யே­யு­மான பரஸ்­பர பரா­ம­ரிப்பின் அத்­தி­யா­வ­சி­யத்தை அறி­வியல் சான்­று­க­ளினால் ஆதா­ரப்­ப­டுத்­து­கின்­றது. தற்­கா­லங்­களில் சில கலை­ஞர்கள் ஆன்­மிக தார­ணை­களை அலட்­சியம் செய்யும் சந்­தர்ப்­பங்­களைக் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இதனால் அவர்கள் காமம், பேராசை, பொறாமை என்­ப­வற்­றினால் தாக்­கப்­பட்டு கலையின் ஆன்­மிக தூய்­மை­யினை இழந்து விடு­கின்­றனர். அத்­த­கை­ய­வர்­களின் கலைப்­ப­டைப்­பினால் தற்­கா­லி­க­மான லௌகீக பேறு­களை அடை­ய­லா­மே­யன்றி நிரந்­த­ர­மான அலௌ­கீகப் பேறு­களை அடை­வது சாத்­தி­ய­மா­காது. அத்­துடன் மனித மனமும் இயற்­கையும் அதன் இயல்­பான பய­ணப்­பா­தையை விட்டுத் தவ­று­வதை கலை­யா­னது சுட்­டிக்­காட்­டாது விட்டால் அல்­லது பரஸ்­பரம் நல்­லு­ற­வினைப் பேணாது விட்டால் கலை­யா­னது அது அடைய வேண்­டிய அதி­யுயர் இலக்­கை­விட்டு தடம் மாறிச் செல்­கின்­றது என உணர்ந்து கொள்­ளலாம்.




"­க­லைகள் வெறும் கலை­களே என்­றனர் சிலர். வேறு சிலர், கலைகள் வாழ்க்­கைக்­கா­க­வே ­என்­றனர். சந்­தோ­ஷத்­தையும் களிப்­பையும் வாழ்வில் தூண்­டு­த­லையும் ஏற்­ப­டுத்­தா­விட்டால் அது கலை இல்லை என்று அவர்கள் வலி­யு­றுத்­தி­னார்கள். மற்றும் சிலர் கலைகள் சமு­தா­யத்­திற்­கா­கவே என்­றனர். அவை சமூக நலன்­க­ளுக்­காகப் பயன்­பட வேண்டும் என்­றனர். கலைகள் சமூக தரத்தின் வீழ்ச்­சி­யி­னையும் அதன் யதார்த்த நிலை­யி­னையும் ெவளிப்­ப­டுத்­தா­விட்டால், மக்­களை அர­சியல், பொரு­ளா­தார, சமு­தாய அடி­மைத்­த­னங்­களிலிருந்தும், அநீதி மற்றும் மனி­தா­பி­மா­னத்­துக்கு எதி­ரான சவால்கள் போன்­ற­வற்றிலிருந்தும் சுதந்­திரம் அடை­வ­தற்­கான உந்­து­தலை வழங்­கா­விட்டால், அவை தமது உண்­மை­யான நோக்­கத்தை ெவளிப்­ப­டுத்­த­வில்லை என்­பதே அதன் அர்த்தம்.




-பி.கு.ஜெகதீஷ் சந்தர் ஹசிஜா (1921-–2001) ராஜ யோகி, எழுத்­தாளர் – - இந்­தியா




(``Some have said that Art is for art sake. Others have emphasized that art is for life. if it does not give enjoyment, entertainment and inspiration to life, it is not Art. Still others have said that Art is for society. It should work for social good. If it does not reflect the failings and true state of the society and does not inspire people to liberate themselves from political, economic or social slavery from injustice and inhumanity, it does not serve its purpose.``




- BK Jegdish Chander Hassija (1921-–2001) Raja yoga teacher, writer- India)




இன்­றைய கால­கட்­டங்­களில் அறி­வியல் ரீதியில் ஒன்றை ஆராய்ந்து பார்த்து அதனை ஏற்றுக் கொள்­வது பொதுவான விடயம். அது பலரை பல வழிகளில் சிந்திக்கவும் தூண்டுகின்றது. அவ்வகையில் அறிவியலும் ஆன் மீகமும் உணர்த்தும் சிவபெருமா னின் ஆனந்த நடனத் தத்துவங்கள் என்றுமில்லாதவாறு இன்று காலச்சக்கரம் சவால் விடுகின்ற அதிஉயர்ந்த மனித விழுமியங்களை கட்டியெழுப்புவதன் மூலம் சுய விழிப்புணர்வுடன் சமூக நலனை யும் கருத்தில் கொள்ளவே.




(Information source – Prof.Dr.M.Kithsiri Jayananda, University of Colombo, CERN website, books of BK Jegdish Chander Hassija, & self-analysis by Thushyanthy Velauthan)




துஷ்யந்தி வேலாயுதன்

COMMENTS

Name

Bakthi,12,
ltr
item
Bakthi.net: அறிவியலும் ஆன்மீகமும் உணர்த்தும் சிவபெருமானின் ஆனந்த நடனத் தத்துவங்கள்!
அறிவியலும் ஆன்மீகமும் உணர்த்தும் சிவபெருமானின் ஆனந்த நடனத் தத்துவங்கள்!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7Stxw-vI-N7wu1WoSqHdm-LTXi7a67IDscGFnpMgC00DCsyJoq13sxTT1T11o5bn_2KAB24ieLY8m3H4jL-E8p0p4TvaB1I9BtQiqN3j5hyphenhyphenCj2JEKlFo9JpQNwF7D1EOMhp8iVngqPwM/s640/%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%2586%25E0%25AE%25A9%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4+%25E0%25AE%25A8%25E0%25AE%259F%25E0%25AE%25A9%25E0%25AE%25A4%25E0%25AF%258D+%25E0%25AE%25A4%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7Stxw-vI-N7wu1WoSqHdm-LTXi7a67IDscGFnpMgC00DCsyJoq13sxTT1T11o5bn_2KAB24ieLY8m3H4jL-E8p0p4TvaB1I9BtQiqN3j5hyphenhyphenCj2JEKlFo9JpQNwF7D1EOMhp8iVngqPwM/s72-c/%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%2586%25E0%25AE%25A9%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4+%25E0%25AE%25A8%25E0%25AE%259F%25E0%25AE%25A9%25E0%25AE%25A4%25E0%25AF%258D+%25E0%25AE%25A4%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D.jpg
Bakthi.net
https://www.bakthi.net/2020/02/blog-post_82.html
https://www.bakthi.net/
https://www.bakthi.net/
https://www.bakthi.net/2020/02/blog-post_82.html
true
6253798714521946289
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy