தைமாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்தநாள்தைப்பூசதினம் என்பர் . தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் ( தமிழ் பஞ்சாங்கப்படி பத்தா வதுமாதம். இது பூஸாமாதம் என்றும் அறியப்படும் ) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடிவரும் நன் நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும் . நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழுநிலவு பூசநட்சத்திரத் திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது .
தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.
முருகன் தமிழ்க்கடவுள் ஆவார் . முருகன் என்றால் அழகு என்று பொருள் . முருகன் தேவ சேனாதி பதி தேவர்களின் சேனாதிபதி ஆகை யால் இவர் ஒரு போர்க்கடவுள் ஆவார் . தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒருவிழாவாகபழனியில் அனுஷ்டிக் கப்படுகிறது.
சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நட னம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.
சிதம்பரத்திற்கு வந்து அரும் பெரும் திருப்பணிகள் செய்து , நட ராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத்தரிசித் தது இந்நாளிலேயே . இக்காரணங்க ளுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படு கின்றன .
தேவர்களில் குருவாகிய பிரகஸ் பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.
வள்ளலார் இராமலிங்க சுவாமி கள் ஒருதை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்றுதான் ஒளி யானார் . இதனைக் குறிக்கும் வித மாக அவர் ஒளியான வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில் , தைப்பூசத்தன்று இலட்சக்கணக்கா னோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள் .
தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனை வழிபடுவர். முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுக்கு பிறகு கோவிலில் அன்னதானம் வழங்கப்படும். மக்கள் கோவில்களில் முருகனை வேண்டி வழிபடுவது வழக்கம்.
COMMENTS