இலங்கையில் பெரியபுராணம்

SHARE:


அறி­முகம்

பக்திச்சுவை சொட்டும் தமிழ்க்­காப்­பியம் என்ற பெரு­மைக்­கு­ரி­யது பெரி­ய­பு­ராணம். சைவத்­தி­ரு­மு­றைகள் பன்­னி­ரண்­டினுள் இறுதி நிலையில் - திரு­மு­றை­களுள் ஒன்­றாக வைத்துப் போற்­றப்­படும் சிறப்பு இதற்கு உண்டு. இதனைத் திருத்­தொண்டர் மாக்­கதை எனவும் திருத்­தொண்டர் புராணம் எனவும் சிறப்­பிப்பர். இக்­காப்­பி­யத்தை அரு­ளி­யவர் சேக்­கிழார் பெருமான் ஆவார். இவர் வாழ்ந்த காலம் குறித்துப் பல்­வேறு கருத்­துக்கள் உள்­ளன. புலவர் க. வெள்­ளை­வா­ரணார் கருத்­துப்­படி இவர் பன்­னி­ரண்டாம் நூற்­றாண்டின் பிற்­ப­கு­தியில் வாழ்ந்­த­வ­ராகக் கொள்­ளப்­ப­டு­கின்றார்.

'உல­கெலாம்' என இறை­வனே அடி­யெ­டுத்துக் கொடுத்த சிறப்பு பெரி­ய­பு­ரா­ணத்­திற்கு உள்­ளது. உல­கெலாம் எனத் தொடங்கி உல­கெலாம் என முடியும் காப்­பியம் என்ற பெரு­மையும் பெரி­ய­பு­ரா­ணத்­திற்கு உண்டு.

சுந்­த­ர­மூர்த்தி நாய­னாரால் அரு­ளப்­பெற்ற திருத்­தொண்­டத்­தொ­கையை முதல்­நூ­லா­கவும் நம்­பி­யாண்டார் நம்­பியால் பாடப்­பெற்ற திருத்­தொண்டர் திரு­வந்­தா­தியை வழி நூலா­கவும் கொண்டு 4286 பாடல்­களைக் கொண்டு (சில நூற்­ப­திப்­புக்கள் 4253 பாடல்­க­ளையே கொண்­டுள்­ளன) அமைந்­தி­ருப்­பது பெரிய புராணம். இக்­காப்­பியம் இரு காண்­டங்­க­ளா­கவும் பதின்­மூன்று சருக்­கங்­க­ளா­கவும் வகுக்­கப்­பட்­டுள்­ளது. அறு­பத்­து­மூன்று தனி­ய­டியார் வர­லா­று­களும் ஒன்­பது தொகை­ய­டியார் வர­லா­று­களும் இந்­நூலில் உள்­ளன.

பத்­தா­யி­ரத்­திற்கும் மேற்­பட்ட பாடல்­களைக் கொண்ட நூல்­க­ளுக்குப் பெரிய என்ற அடை இல்­லாத நிலையில் நான்­கா­யி­ரத்­திற்குச் சற்று அதி­க­மான பாடல்­களைக் கொண்ட இந்நூல் பெரிய என்ற அடையைப் பெறு­வ­தற்குக் காரணம் இந்நூல் தொண்­டர்­க­ளு­டைய பெரு­மையைப் பேசு­வ­தனால் ஆகும். 'தொண்டர் தம்­பெ­ருமை சொல்­லவும் பெரிதே' என்ற ஒள­வையின் வாக்­கிற்கு அமை­வாக இந்நூல் தொண்­டர்­க­ளுக்­குள்ள பெரு­மையால் பெரிய புராணம் என்ற பெயரைப் பெற்­றது.

சைவத்தின் தனித்­துவக் காப்­பியம்

சைவ­ச­ம­யத்தின் பெரு­மை­களை எடுத்­தி­யம்பும் தனித்­துவம் மிக்க காப்­பியம் என்ற பெருமை பெரிய புரா­ணத்­திற்கு உண்டு. தமிழில் எழுந்த கம்­ப­ரா­மா­யணம், சீவ­க­சிந்­தா­மணி, சிலப்­ப­தி­காரம், குண்­ட­ல­கேசி, வளை­யா­பதி என எக்­காப்­பி­யமும் இப்­பெ­ரு­மையைப் பெறு­வ­தில்லை. அலகில் சோதியன் அம்­ப­லத்­தா­டுவான் (01) என்றும் இன்ன தன்­மையன் என்று அறியாச் சிவன் (23) என்றும் முந்தை மறை ஆயிரம் மொழிந்த திரு­வாயான் (179) அரு­மறை முறை­யிட்டு இன்னும் அறி­வ­தற்கு அரியான் (192) முன்­னாகி எப்­பொ­ருட்கும் முத­லாகி நின்றான் (1421) என்­ற­வாறு அமைந்த அடிகள் சிவ­னது பெரு­மையைச் சுட்­டு­கின்­றன.

சிவ­ன­டியார் எப்­படி இருப்பர்?

பெரிய புரா­ணத்தின் திறவுகோலாக பேரா­சி­ரியர் அ.ச.ஞான­சம்­பந்தன் இரு பாடல்­ களைச் சுட்­டிக்­காட்­டுவார்.

கேடும் ஆக்­கமும் கெட்ட திரு­வினார்
ஓடும் செம்­பொனும் ஒக்­கவே நோக்­குவார்
கூடும் அன்­பினில் கும்­பி­டலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்­கினார்:
(143)


ஆரம் கண்­டிகை ஆடையும் கந்­தையே
பாரம் ஈசன் பணி­அ­லது ஒன்­றிலார்
ஈர அன்­பினர் யாதும் குறை­விலர்
வீரம் என்னால் விளம்பும் தகை­யதோ?
(144)


குரு லிங்க சங்­கம வழி­பாடு

சிவப்­பேறு அடை­வ­தற்­கான மார்க்­கங்­களுள் ஒன்று குருலிங்க சங்­கம ( சங்­கமம் - அடியார் திருக்­கூட்டம்) வழி­பாடு ஆகும். பெரி­ய­பு­ராணம் காட்டும் தனி­ய­டி­யார்கள் அறு­பத்­து­மூ­வருள் குரு­வ­ழி­பாட்டில் பன்­னி­ரு­வரும் லிங்க வழி­பாட்டில் முப்­ப­து­பேரும் சங்­கம வழி­பாட்டில் பத்­தொன்­பது பேரும் ஈடு­பட்டு முக்­தி­ய­டைந்­துள்­ளனர் என நாவலர் பெருமான் குறித்­துக்­காட்­டி­யுள்ளார்.

சிவ­பெ­ருமான் எமது பிறவித் துன்­பத்தை நீக்­கவே குரு­வாக எழுந்­த­ரு­ளு­கின்றார். இதனைத் திரு­வ­ருட்­பயன் பாடல் பின்­வ­ரு­மாறு விளக்­கு­கின்­றது.

பார்­வை­யென மாக்­க­ளைமுன்
பற்றிப் பிடித்­தற்காம்
போர்­வை­யெனக் காணார் புவி

பழக்­கப்­பட்ட மிரு­கத்தின் உத­வி­யுடன் அதே இனத்து மிரு­கத்தைப் பிடிப்பர். அதே போலச் சிவன் எம்மை ஆட்­கொள்ள மானுடச் சட்டை தாங்கி வரு­கின்றார். திரு­மூலர், மங்­கை­யர்க்­க­ர­சியார், குலச்­சி­றையார், அப்­பூ­தி­ய­டிகள் முத­லியோர் குரு­வ­ழி­பாட்டால் வீடு­பேறு அடைந்­தோ­ராவர். குருவை உள்­ளன்­போடு வழி­படும் முக­மாக நாயன்­மார்­க­ளது குரு­பூஜைத் தினங்­களை நாமும் அனுஷ்­டிக்­கின்றோம்.

நாவ­ல­ரு­டைய வேண்­டு­கோளை ஏற்று நம்­மண்ணில் சைவ­நா­யன்­மார்­க­ளதும் மணி­வா­ச­க­ரதும் சேக்­கி­ழா­ரதும் சந்­தான குர­வர்­க­ளதும் குரு­பூ­ஜைகள் மிகத் தீவி­ர­மாக ஆல­யங்கள், மடங்கள், பாட­சா­லைகள் தொறும் இடம்­பெற்­ற­ன­வா­யினும் இச்­செ­யற்­பா­டு­களில் தற்­போது ஒரு தொய்வு நிலை எதிர்­கொள்­ளப்­ப­டு­வது வருத்­தத்­திற்­கு­ரி­ய­தாகும்.

லிங்க வழி­பாடு என்­பதில் லி என்­பது ஒடுங்­கு­த­லையும் கம் என்­பது தோன்­று­த­லையும் குறிப்­ப­தாகக் கொள்வர். திருக்­கோ­வில்­களில் உள்ள விக்­கி­ர­கங்­களில் முதன்மை பெற்­றது சிவ­லிங்­கமே ஆகும். சிவ­லிங்­கத்தின் கீழ்ப்­பீடம் ஆவு­டையார் எனவும் மேற்­பாகம் பாணம் அல்­லது லிங்கம் எனவும் பெயர் பெறும். சேரமான் பெருமாள், சாக்­கியர், கலிக்­காமர், பூசலார் முத­லியோர் சிவ­லிங்க வழி­பாடு மேற்­கொண்டு முத்தி பெற்­றனர்.

சிவ­ன­டி­யா­ரிடம் மெய்­யன்பு பூண்டு ஒழு­கு­வோரே சங்­கம வழி­பாட்­டிற்கு உரி­யவர் ஆவர். சிவனை நினைத்­த­லிலும், அவரைப் பற்றிக் கேட்­ட­லிலும் இன்­பு­றுவர். அடி­யா­ருக்­கு­ரிய பாவனை, செயல், வேடம் என இவை எவற்­றையும் உடைய ஒரு­வரைச் சிவ­மா­கவே கருதி வழி­ப­டுவர். ஆவு­ரித்துத் தின்று உழலும் புலை­ய­ரேனும் கங்­கைவார் சடைக்­க­ரத்­தார்க்கு அன்­ப­ராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுள்' என நாவுக்­க­ரசர் போற்­று­வது இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்­கது. திரு­நீ­ல­கண்டர், சிறு­தொண்டர், இளை­யான்­கு­டி­மாறன், இயற்­ப­கையார் முத லியோர் சங்­கம வழி­பாட்டை மேற்­கொண்டு முக்­தி­பெற்­றனர்.

சமு­தாயக் காப்­பியம்

சோழ மன்­னனின் அமைச்­ச­ராகப் பணி­யாற்­றிய சேக்­கிழார் பெரிய புரா­ணத்தில் அர­சியல் நெறி­மு­றைகள் பற்­றியும் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். சேர­மன்­ன­னா­கிய சேரமான் பெரு­மா­ளையும் சோழ மன்னன் ஆகிய புகழ்ச்­சோழன் மற்றும் கோச்­செங்­கட்­சோழன் ஆகி­யோ­ரையும் பாண்­டிய மன்­ன­னா­கிய நின்­றசீர் நெடு­மாறன், மனைவி மங்­கை­யர்க்­க­ர­சியார் ஆகி­யோ­ரையும் ஐய­டிகள் காட­வர்கோன், கழற்­சிங்கர் ஆகிய பல்­லவ மன்­னர்­க­ளையும் கூற்­றுவ நாயனார் என்ற களப்­பிர அர­ச­னையும் மெய்ப்­பொருள் நாயனார், நர­சிங்­க­மு­னை­ய­ரையர் போன்ற குறு­நில மன்­னர்­க­ளையும் சிறு­தொண்டர், மானக்­கஞ்­சா­றனார், ஏயர்கோன் கலிக்­காமர் போன்ற படைத்­த­லை­வர்­க­ளையும் நாய­னார்­க­ளாக பெரு­மைப்­ப­டுத்­து­கின்­றது பெரி­ய­பு­ராணம்.

பல்­வேறு குலத்­த­வர்­களும் பேதம் பாராது இங்கு நாயன்­மார்கள் என்ற உயர் தகை­மைக்கு உள்­ளா­கின்­றனர். திரு­ஞா­ன­சம்­பந்தர் என்ற அந்­தணர் பாடும் பாடல்­க­ளுக்கு திரு­நீ­ல­கண்ட யாழ்ப்­பாணர் என்ற பாணர் யாழ் வாசிக்­கின்றார். பாண­ரையும் அழைத்துக் கோவில் பிர­வேசம் செய்­கிறார் சம்­பந்தர்.

அந்­த­ண­ரா­கிய அப்­பூ­தி­ய­டிகள் வேளாண் குடியைச் சார்ந்த அப்பர் அடி­கள்பால் அன்பு கொள்­கிறார். ஆதி சைவர் மரபில் தோன்­றிய சுந்­தரர், அர­ச­வையில் வளர்­கின்றார். கணி­கையர் குலத்தைச் சார்ந்த பர­வை­யாரைக் களவு மணம் செய்­கின்றார். வேளாண்­குடி சார்ந்த சங்­கி­லி­யாரைக் கற்­பு­மணம் புரி­கின்றார். இவ்­வாறு சாதி வேறு­பா­டு­களைக் களை­வதை அடிப்­படைச் செய்­தி­யாகக் கொண்டு படைக்­கப்­பட்ட காப்­பி­ய­மாகப் பெரி­ய­பு­ராணம் திகழ்­கின்­றது. இன்­றைய இலக்­கி­ய­க்காரர் பார்­வையில் சொல்­வ­தானால் ஒரு முற்­போக்குக் காப்­பி­ய­மாகப் பெரி­ய­பு­ராணம் திகழ்­கின்­றது.

காரைக்­கா­லம்­மையார், மங்­கை­யர்க்­க­ர­சியார், இசை­ஞா­னியார் ஆகிய பெண்­களை நாயன்­மார்­க­ளாகக் காட்­டிய காப்­பியம் பெரிய புராணம். ஆண்­க­ளுக்கு நிக­ராகப் பெண்­க­ளுக்குச் சம­தை­யான அந்­தஸ்து வழங்­கப்­ப­டாத காலத்தில் சேக்­கிழார் இக்­க­ருத்துப் புரட்­சியை மேற்­கொண்­டி­ருக்­கின்றார்.

தமிழ் வழி­பாடு இன்று முனைப்புப் பெறும் சூழலில் 'அர்ச்­சனை பாட்­டே­யாகும்' என்று இசை­யோடும் பொரு­ளோடும் கூடிய பக்திப் பாடலே அர்ச்­ச­னை­யாகும் என்­கிறார்.

இன்று எமது சமயம் எதிர்­கொள்ளும் ஆரோக்­கி­ய­மற்ற பூசல்­க­ளுக்குத் தீர்­வாக பெரி­ய­பு­ரா­ணத்தை முதன்­மைப்­ப­டுத்தும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது சாலச்­சி­றந்­த­தாக அமையும். இதனை உணர்ந்த நம்­முன்னோர் இத்­த­கைய செயற்­பா­டு­களை காலத்­திற்குக் காலம் முன்னெடுத்துள்ளனர். இது குறித்த சில தகவல்களை இக்கட்டுரையாளர் தனது அறிவுக்கெட்டிய வரையில் இங்கு பதிவு செய்துள்ளார்.

பஞ்சபுராணப் பாரம்பரியத்தில் பெரியபுராணம்

நாவலர் ஏற்படுத்திய பஞ்சபுராணம் பாடும் மரபில் நிறைவுப் பாடலாக அமைந்திருப்பது பெரியபுராணம் ஆகும். கோவில்களிலும் விழாக்களிலும் திராவிட கானம் என்ற நிலையில் தேவாரமும் பெரிய புராணப் பாடலும் பாடும் நிலை மையே இன்று நடைமுறையில் பெருவழக் காகக் காணப்படுகின்றது. தவிர, பெரிய புராணத்திற்குப் பதிலாக கந்தபுராணம், திருவிளையாடல் புராணம் முதலிய பாடல் களைப் பாடும் நிலைமையையும் காண முடிகின்றது.

ஆலயத்தில் திருமுறை ஓதுகின்றவர்கள் புராணம் பாடும் போது பெரிய புராணத் தையே பாட வேண்டும் என்ற மரபு நீண்டகாலமாக நம்மண்ணில் பேணப் பட்டு வருகின்றது. அதனை மீண்டும் வலியுறுத்திப் பேணவேண்டியது எமது கடமையாகும்.

அகில இலங்கைச் சேக்­கிழார் மன்றம் என்ற அமைப்பு 1950 களில் இருந்து 1980 கள் வரை யாழ்ப்­பாண மண்ணை மையப்­ப­டுத்திச் செயற்­பட்ட ஓர் அமைப்­பாகும். அர­ச­டியைச் சேர்ந்த சட்­டத்­த­ரணி அமரர் சோம­சுந்­தரம் இதன் செய­லாள­ராக இருந்து செயற்­பட்டார். அவ­ரது மறை­வுக்குப் பின்னர் இம்­மன்றச் செயற்­பா­டுகள் செய­லி­ழந்­து­போ­யின. அம­ரர்­க­ளான சொக்கன், சிவ­ரா­ம­லிங்­கம்­பிள்ளை போன்ற ஆசி­ரி­யர்கள் இம்­மன்றச் செயற்­பாட்டில் ஈடு­பாடு கொண்­டி­ருந்­தனர். சைவ­ப­ரி­பா­லன சபையைச் சேர்ந்த பெரி­யோர்­களும் யாழ். இந்துக் கல்­லூரி ஆசி­ரி­யர்­களும் இந்த மன்­றத்தை அமைத்துச் செயற்­ப­டுத்­து­வதில் பெரும்­பங்­காற்­றினர்.

அரு­ணை­வ­டிவேல் முத­லியார், பேரா­சி­ரியர் ஆறு. அழ­கப்பன், முத­லிய தமி­ழக அறி­ஞர்கள் காலத்­திற்குக் காலம் இவ்­வி­ழாவில் பங்­கேற்­றி­ருக்­கின்­றனர். யாழ். வண்ணைச் சிவன் கோவிலில் இருந்து திரு­முறைச் சுவ­டி­களை ஊர்­வ­ல­மாகக் கொண்டு சென்று யாழ். இந்துக் கல்­லூரித் திறந்­த­வெளி அரங்கில் சேக்­கிழார் விழா நடத்­திய பெருமை இந்த மன்­றத்­திற்கு உண்டு.

இன்று யாழ்.மண்ணின் முன்­னணி ஆன்­மீகப் பேச்­சா­ள­ராகத் திகழும் கலா­நிதி ஆறு­முகம் திரு­மு­ருகன் ஆறு.திரு­மு­ருகன் என்ற நாமத்தைச் சூடிக்­கொண்­டதும் சேக்­கிழார் மன்றம் முன்­னெ­டுத்த விழா ஒன்­றி­லேயே ஆகும். 1973 ஆம் ஆண்டில் யாழ். இந்துக் கல்­லூ­ரியில் நடை­பெற்ற சேக்­கிழார் விழாவின் போது பேரா­சி­ரியர் ஆறு. அழ­கப்பன் வந்­தி­ருந்த சூழலில் மாண­வ­னாகப் பேச மேடை­யே­றிய திரு­மு­ரு­கனை அழைத்த தேவன் ஆறு.திரு­மு­ருகன் இருக்­கிறார் என அழைத்­தாராம். அதற்குப் பின்னர் ஆ.திரு­மு­ருகன், ஆறு.திரு­மு­ருகன் என்ற அடை­யா­ளத்தைப் பெற்றார்.

1980களில் கைவி­டப்­பட்ட சேக்­கிழார் மன்றச் செயற்­பா­டுகள் 2003 இல் சில ஆர்­வ­முள்ள இளை­ஞர்­களால் மீள ஆரம்­பிக்­கப்­பட்­டன. சேக்­கிழார் கழகம் என்ற பெயரை அது கொண்­டி­ருந்­தது. நல்லை ஆதீ­னத்தில் அவ் ஆண்டு சேக்­கிழார் விழா நடத்­தப்­பட்­டது. இருந்­த­போதும் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக அதன் செயற்­பா­டுகள் ஒராண்­டுடன் நின்­று­விட்­டன.

நல்லை ஆதீ­னத்தின் முத­லா­வது குரு­மகா சந்­நி­தா­ன­மாகத் திகழ்ந்த ஸ்ரீலஸ்ரீ சுவா­மி­நாத தேசிக ஞான­சம்­பந்த பர­மாச்­சா­ரியார் ஒரு முறை சேக்­கிழார் விழாவை பிர­மாண்­ட­மாக முன்­னெ­டுத்­துள்ளார். இதற்­காக உரு­வாக்­கப்­பட்ட சேக்­கிழார் திரு­வு­ரு­வச்­சிலை ஆதீ­னத்தில் இன்றும் உள்­ளது.

யாழ்ப்­பா­ணத்தின் வெவ்வேறு பகு­தி­களில் சேக்­கிழார் விழாக்கள் அவ்­வப்­போது முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. ஆயினும் காலக்­கி­ர­ம­மாக சேக்­கிழார் விழா முன்­னெ­டுக்­கப்­படும் செயற்­பாடு யாழ். இந்துக் கல்­லூ­ரியில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சேக்­கிழார் விழா­வுடன் நின்­று­விட்­டது.

ஊருக்குப் பெயர்

அறு­பத்து மூவரைப் பெரு­மைப்­ப­டுத்தும் வித­மாக நல்­லூரில் உள்ள ஓர் ஊர் நாயன்­மார்­கட்டு எனப் பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது. இங்கு அறு­பத்­து­மூவர் மடம் இருந்­த­தாகக் குறிப்­பி­டுவர். ஆயினும் இன்று இங்கு மடம் காணப்­ப­ட­வில்லை. ஊர்ப்­பெயர் நின்று நிலைத்­துள்­ளது. நாயன்­மார்­கட்­டுடன் பெரி­ய­பு­ராணப் பெருமை ஒட்­டி­யுள்­ள­மையை இவ்வூர் மக்கள் உணர்­வது அவர்­க­ளுக்குப் பெருமை தரு­வ­தாக அமையும்.

அறு­பத்­து­மூவர் மடம்

நல்லூர் கந்­த­சு­வாமி கோவில் தேர­டியில் 1892 இல் அமைக்­கப்­பெற்ற திரு­மடம் அறு­பத்­து­மூவர் குரு­பூசை மடம் என்ற பெயரில் அமைக்­கப்­பட்­டது. வை.அரு­ணா­சலம், சு.ஆறு­முகம், க.கார்த்­தி­கேசு, ச.சடை­யம்மா, சி.கதி­ரை­வேற்­பிள்ளை ஆகியோர் இப்­ப­ணியில் இணைந்­த­தாக அறி­ய­மு­டி­கின்­றது. இத­னை­விட சுழி­பு­ரத்­திலும் அறு­பத்­து­மூவர் மடம் உள்­ளது. வேலணை பெருங்­குளம் முத்­து­மாரி அம்மன் ஆல­யத்­திற்கு அரு­கிலும் அறு­பத்து மூவர் மடம் அமைந்­துள்­ளது. நீர்­வேலி அர­ச­கே­சரிப் பிள்­ளையார் கோவில் வீதியில் திரு­நா­வுக்­க­ரசு நாயனார் திரு­மடம் உள்­ளது. இங்கு அறு­பத்து மூவர் குரு­பூசை கிர­ம­மாக இன்றும் இடம்­பெ­று­கின்­றது. இதற்­கெனத் தனித்­தனி உப­ய­கா­ரர்கள் உள்­ளனர்.

பெரி­ய­பு­ராண நூலாக்கம்

பெரி­ய­பு­ராணம் ஆல­யங்­களில் படிக்­கப்­படும் சிறப்பு இலங்­கையில் பல கால­மாக நிலவி வரு­கின்­றது. இன்றும் சில ஆல­யங்­களில் இந்­ந­டை­முறை உண்டு. ஆறு­மு­க­நா­வலர் தமது நூலாக்க முயற்­சியில் ஒரு புரட்­சியை ஏற்­ப­டுத்­தினார். புராண நூல்­க­ளுக்கு அவர் வசன வடிவம் கொடுத்தார். திருத்­தொண்டர் பெரி­ய­பு­ராண வசனம் என்ற பெயரில் 1852 இல் நூலை வெளி­யிட்டார். இந்நூல் இரு­ப­துக்கும் மேற்­பட்ட பதிப்­புக்­களைக் கண்ட சிறப்­பிற்­கு­ரிய நூலாகும்.

தெல்­லிப்­பழை ஸ்ரீ துர்க்­கா­தேவி தேவஸ்­தானம் பன்­னிரு திரு­மு­றை­களை நூலாகத் தொகுத்து வெளிக்­கொ­ணரும் பாரிய பணியை முன்­னெ­டுத்­துள்­ளது. அதில் ஓரங்­க­மாக பெரி­ய­பு­ராணம் தொடர்­பான மூன்­றா­வது தொகு­தியை ஆலயம் இந்த ஆண்டு (2017) வெளி­யிட்­டுள்­ளது.

யாழ். இள­வா­லையைச் சேர்ந்த சிவ­யோ­க­வதி கந்­த­வனம் அறு­பத்­து­மூவர் வர­லாற்றை அரு­ளாளர் தொண்டு என்ற பெயரில் 2013இல் நூலாக வெளி­யிட்­டுள்ளார். ராஜேஸ்­வரி ஜெகா­னந்­த­குரு, அரு­ளாளர் அறு­பத்­து­மூவர் என்ற பெயரில் 2016 இல் காத்­தி­ர­மான நூல் ஒன்றை வெளி­யிட்­டுள்ளார். இது அறு­பத்து மூவர் பற்­றிய வர­லாற்றை உரைக்கும் நூலாக உள்­ளது.

இள­வா­லையைச் சேர்ந்த பண்­டிதர் அப்­புத்­துரை, ஏழாலை மாதாஜி அம்­மையார், இணுவில் மூ.சிவ­லிங்கம் போன்­றோரும் அறு­பத்து மூவர் வர­லாறு பற்­றிய சிறிய நூல்­களை வெளி­யிட்­டுள்­ளனர்.

கலா­நிதி மனோன்­மணி சண்­மு­கதாஸ், ச.லலீசன் ஆகியோர் இணைந்து 2010இல் பெரி­ய­பு­ராணம் காட்டும் வாழ்­வியல் என்ற நூலைப் பதிப்­பித்­துள்­ளனர். இது பெரி­ய­பு­ராணம் காட்டும் வாழ்­வியல் என்ற பெயரில் யாழ்ப்­பா­ணத்தில் 2009ஆம், 2010 ஆம் ஆண்­டு­களில் இடம்­பெற்ற ஆறு கருத்­த­ரங்­கு­களில் வாசிக்­கப்­பட்ட கட்­டு­ரை­களின் தொகுப்பு நூலாகும்.

கொழும்பு கம்பன் கழ­கத்தின் ஏற்­பாட்டில் 2010 ஐ அண்­டிய காலப்­ப­கு­தியில் பெரி­ய­பு­ராணத் தொடர் பேருரை இடம்­பெற்­றது. இப்­பே­ரு­ரையை தமி­ழ­கத்தின் பிர­பல பேச்­சாளர் அமரர் இரா.செல்­வ­க­ண­பதி நிகழ்த்­தினார். இதே வேளை 2003 ஆம் ஆண்டில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் தெல்­லிப்­பழை துர்க்­கா­தேவி தேவஸ்­தா­னத்தில் பெரி­ய­பு­ராணம் குறித்துச் சிறப்­பு­ரை­யாற்­றினார். யாழ்ப்­பாண வர­லாற்றில் இஸ்­லா­மியர் ஒரு­வரால் பெரிய புராணம் குறித்த பக்தி உரை நிகழ்த்­தப்­பட்ட முதல்­சந்­தர்ப்பம் இதுவே ஆகும்.

நெல்­லி­யடி தடங்­கன்­பு­ளி­யடி முருகன் கோவில் மண்­ட­பத்தில் ப.தயா­ப­ரனின் ஏற்­பாட்டில் சேக்­கிழார் விழா 2003 இல் இடம்­பெற்­றது. தமி­ழகப் பேரா­சி­ரியர் அரங்க இரா­ம­லிங்கம் கம்­ப­வா­ரிதி இ.ஜெய­ரா­ஜுடன் கலந்து கொண்டு சிறப்­பித்தார்.

வட­பு­லத்தில் ஆலயத் திரு­வி­ழாக்­களின் போது பெரி­ய­பு­ராணம் தொடர்­பான தொடர்­பே­ரு­ரைகள் அவ்­வப்­போது இடம்­பெற்­றுள்­ளன. இவ்­வாறு நூற்­றுக்கும் மேற்­பட்ட தொடர் பேரு­ரைகள் நிகழ்ந்­தி­ருக்­கலாம் என்­பது இக்­கட்­டு­ரை­யா­ளரின் கணிப்பு ஆகும். ஆன்­மீகப் பேச்­சா­ளர்கள் பலரும் இல­குவில் கையாளும் தொடர் சொற்­பொ­ழி­வுக்­கு­ரிய விட­ய­மாகப் பெரி­ய­பு­ரா­ணத்­தையே கொண்­டுள்­ளனர்.

இந்து சமய அலு­வல்கள் அமைச்சு 2005 ஆம் ஆண்டில் ஐந்­தா­வது உலகச் சேக்­கிழார் மாநாட்டை இலங்­கையில் (கொழும்பில்)முன்­னெ­டுத்­தது. இது தொடர்­பான சிறப்பு மலர் 'தெய்­வச்­சேக்­கிழார்' என்ற பெயரில் வெளி­யி­டப்­பட்­டது.

அறு­பத்து மூவர் குரு­பூசை

அறு­பத்து மூவ­ருக்குக் குரு­பூசை எடுக்கும் வழக்கம் பல இடங்­களில் காணப்­பட்­டது. தற்­போது இது வழக்­கொ­ழிந்­து­விடும் நிலையில் காணப்­ப­டு­கின்­றது.

யாழ். புத்தூர் ஸ்ரீ சோமாஸ்­கந்தக் கல்­லூ­ரியின் நிறு­வுனர் மழ­வ­ராயர் கந்­தையா பாட­சா­லைக்­கென எழு­திய சாச­னத்தில் அறு­பத்து மூவர் குரு­பூ­சையை முன்­னெ­டுப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை எழு­தி­வைத்தார். இறு­தி­யாக 2005 ஆம், 2006 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் கல்­லூ­ரியில் அறு­பத்து மூவ­ருக்கும் குரு­பூசை முன்­னெ­டுக்­க­பட்­டது. கோவிலில் பூசையும் காலைப் பிரார்த்­த­னையில் நாயனார் பற்­றிய மாணவர் உரையும் இடம்­பெற்­றன. ஆயினும் தற்­போது இவ்­வ­ழக்­காறு நடை­மு­றையில் இல்லை. நேர விர­யத்தைக் காரணம் காட்­டியும் வேறு­சில கார­ணங்­க­ளாலும் பாட­சா­லை­களில் சம­ய­கு­ர­வர்­க­ளுக்­கு­ரிய குரு­பூ­சைகள் முன்­னெ­டுக்­கப்­படும் நிலை­மைகள் அரு­கி­வ­ரு­கின்­றன.

விழு­மி­யங்­க­ளு­டைய பற்­றாக்­கு­றையால் வன்­முறை மேலோங்கும் சமூக நிலை­மைக்குத் தீர்­வாக சைவ­நா­யன்­மார்கள் பற்­றிய நிகழ்­வு­களை நடை­முறை வாழ்­வி­ய­லோடு முன்­னெ­டுத்துச் செல்­வது பொருத்­த­மாக அமையும். எடுத்­துக்­காட்­டாக சூழல் மேம்­பாடு குறித்த சமூகப் பணி­களை முன்­னெ­டுத்­த­வ­ராக திரு­நா­வுக்­க­ர­சரை அடை­யா­ளப்­ப­டுத்­தலாம். எந்தப் பொழு­திலும் சிதை­வு­றாத பக்தி வைராக்­கியம் சிறந்த மனத்­தி­டத்தை ஏற்­ப­டுத்த வல்­லது. சமூ­கத்­தினர் மத்­தியில் செல்­வாக்குப் பெறத்­தக்க வகையில் பெரி­ய­பு­ராணச் செய்­தி­களைக் கைய­ளிக்கும் உத்­தியைப் பேச்­சா­ளர்கள் வளர்த்­துக்­கொள்ள வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கின்­றனர்.

அறு­பத்­து­மூவர் திரு­வு­ருவச் சிலைகள்

அறு­பத்து மூவ­ருக்கு ஐம்­பொன்னில் விக்­கி­ர­கங்கள் அமைத்த முதல் ஆல­ய­மாக முன்­னேஸ்­வரம் சிவன் கோவில் விளங்­கு­கின்­றது. திருக்­கே­தீஸ்­வ­ரத்­திலும் அறு­பத்து மூவர் விக்­கி­ர­கங்கள் உண்டு. நயி­னா­தீவு நாக­பூ­சணி அம்மன் பரி­வா­ரத்தில் அறு­பத்­து­மூவர் சிலைகள் உள்­ளன.

நிறை­வாக

பெரி­ய­பு­ராணம் சார்ந்த செயற்­பா­டுகள் குறித்த விழிப்­பு­ணர்வு இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.

சமூகங்களிடையே ஒற்றுமையை வளர்த்தல், சூழல் பற்றிய சிந்தனைகளை மேலோங்கச் செய்தல் பக்திப் பயிர் செழிப்புறச் செய்தல் சமூகப் பணியில் சமயம் சார் நிறுவ னங்களை, ஆலயங்களை ஊக்குவித்தல் தமிழ் சார்ந்த வழிபாட்டுணர்வுகளுக்கான முதன்மை வழங்கல் முதலிய செயற்பாடுகளை முன்னெடுப் பதற்கு பெரிய புராணத்திற்கு வழங்கப் படும் முதன்மை களம் அமைத்துக் கொடுக் கும். தமிழர்களின் வாழ்வியலில் சொந்த இலக்கியங்களை விட வந்த இலக்கியங் களையே முதன்மைப்படுத்தும் போக்குக் காணப்படுகின்றது. இலக்கிய அமைப்பில், பாடுபொருளில், கவிச் சிறப்பில், கற் பனை வளத்தில், பக்தி ரசத்தில் சிறந்து விளங்கும் பெரியபுராணம் பற்றிய விழிப்புணர்வு இளையோரிடத்தில் கட்டியெழுப் பப்படுவது காலத்தின் கடமையாகும். தனியே சைவக்காப்பியம் என்ற வட்டத்துள் இக்காப்பியத்தை வரையறுக்காது தமிழின் செழுமைக்கு அழகு தரும் காப்பியம் என்ற உணர்வை எல்லோரிடமும் விதைத்தல் நலம் தரும்.


செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் பிரதி முதல்வர், கோப்பாய் ஆசிரிய கலாசாலை

COMMENTS

Name

Bakthi,12,
ltr
item
Bakthi.net: இலங்கையில் பெரியபுராணம்
இலங்கையில் பெரியபுராணம்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOF0Tp7mFX3zFtfua9K85XEbl2xYoNFgPUb6YLPGQlbUaAr78UxlTyQxwc7GUEaK0DdfV1UaHO2Oyj3F1mSsMED4CF4ZPtTAZ-l8uJHviSzrVDofVE1c5VixgdwCJMR1aErl6U7NykuC8/s400/Periyapuranam_Author_Sekkizhar.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOF0Tp7mFX3zFtfua9K85XEbl2xYoNFgPUb6YLPGQlbUaAr78UxlTyQxwc7GUEaK0DdfV1UaHO2Oyj3F1mSsMED4CF4ZPtTAZ-l8uJHviSzrVDofVE1c5VixgdwCJMR1aErl6U7NykuC8/s72-c/Periyapuranam_Author_Sekkizhar.jpg
Bakthi.net
https://www.bakthi.net/2020/02/blog-post_0.html
https://www.bakthi.net/
https://www.bakthi.net/
https://www.bakthi.net/2020/02/blog-post_0.html
true
6253798714521946289
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy