தில்லைக் கூத்தனுக்கு உகந்த திருவாதிரையும் திரு எம்பாவையும் நட்சத்திரங் கள் இருபத்தேழில் “திரு” எண்ணும் சிறப்பு அடைமொழியைக் கொண்டுள்ள இரு நட்சத்திரங்கள் ஆவன. ஒன்று திருவாதிரை மற் றொன்று திருவோணம்.திருவாதிரை சிவனாருக்குரியது. திருவோணம் விஷ்ணுபகவானுக்குரியது. எம்பெருமானுக்கு திருஎம்பாவையும் திருப்பள்ளி எழுச்சியும் பாடிப்பரவசமடைய உகந்த காலம் மார்கழி மாதம். இம் மாதம் தேவர்களுக்கு உதய காலமாகும். மார்கழித் திருவாதிரையன்று ஈசன் ஆனந்தக் கூத்து ஆடியமை புராண வரலாறு. இதற்குரிய புனித தலம், தில்லைச் சிதம்பரம், இத்திருநடனத்துள் பல தத்துவங்கள் அடங்கியுள்ளன. இனி, தில்லைத்தலம் பற்றி நோக்குவோம்.
பூவுலகிலுள்ள சகல உயிர்கட்கும் அருள் புரிய வேண்டி முழுமுதற் கடவுளை சிவபெருமான், கோயில் கொண்டருளிய சிவத்த லங்களுள் மிகச் சிறப்பு வாய்ந்தது சிதம்பரமாகும். இத்தலம் ஒரு காலத்திலே தில்லைக் காடாக இருந்த காரணத்தால் தில்லை வனம் என்றழைக்கப்பட்டது. இந்த ஷேத்திரத்திலே தான் புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதரும், ஆதிசேடனுடைய அவதாரமாகிய பதஞ்சலி மகா முனிவரும் கண்டு களிக்க நடராஜமூர்த்தி தனது திருநடனத்தை ஆடிக்காட்டினார் என்பதும் புராண வரலாறு. இத்திருநடனத்தின் மூலம், பஞ்ச கிருத்தியம் எனப்படும் ஐந்தொழில்களும் இடம் பெறுகின்றன. படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்பனவே ஐந்தொழில்களாம். பஞ்ச கிருத்தியமாம்.
“அவனின்றி ஓர் அணுவும் அசையாது” என்றவாறு இறைவனின் இத்திருநடனமே சகல உலகங்களையும் உயிர்களையும் இயங்க வைக்கின்றது. இயக்கியும் வருகின்றது. ஐந்தொழிலுக்கும் ஐம்பூதங்கட்கும் நெருங்கிய தொடர்புண்டு. பிருதுவியில் வியாபித்திருக்கும் பிரம்மதேவன் படைத்தல் தொழிலைப் புரிய, நீரில் வியாபித்திருக்கும்
நாராயண மூர்த்தி காத்தல் தொழிலைப் புரிய, புவனத்திலிருக்கும் நெருப்பு நிறத்தினரான உருத்திரமூர்த்தி அழித்தல் தொழிலைப் புரிய, வாயு புவனத்தில் இருக்கும் மகேஸ்வர மூர்த்தி மறைத்தல் தொழிலைப் புரிய, ஆகாயத்திலே உறையும் சதாசிவமூர்த்தி அருளல் தொழிலையும் செய்வர்.
இப்பஞ்ச கிருத்தியத் தொழிலை எம்பெருமானுடைய தூக்கிய திருவருடியுடனான நடராஜ வடிவத்திலே விளக்கின், இறைவனது ஒரு திருக்கரத்திலே உள்ள டமருகம் என்றழைக்கப்படும் உடுக்கு படைத்தல் தொழிலையும், “பயம் வேண்டாம்” என்னும் அர்த்தத்தில் இருக்கும் அபயகரம் காத்தல் தொழிலையும், அனல் ஏந்திய திருக்கரம் அழித்தல் தொழிலையும், தூக்கிய திருவடி அருளல் தொழிலையும், முயலகனை மிதிக்கும் திருப்பாதம், மறைத்தல் தொழிலையும், என ஐந்தொழில்களையும் சித்திரிக்கின்றது.
மார்கழி மாதத்து வளர்பிறையில் ஆறாம் நாள் தொடங்கி சிவனாலயங்களிலே விசேடமாக திருப்பள்ளி யெழுச்சியைத் தொடர்ந்து திருவெம்பாவை பாடப்படும். 10 ஆம் நாளன்று திருவாதிரையோடு கூடிய இத்தினத்திலே நடராஜப் பெருமானுக்கு விழா எடுக்கப்படும். திருவெம்பாவை மணிவாசகப் பெருமானால் பாடப்பெற்ற திருவாசகத்தின் ஒரு பகுதியாகும்.
தைமாதம் முதல் ஆனி மாதம் வரையில் ஆறு மாத காலம் சூரியனுடைய உத்தராயணம். தேவர்களுக்கு பகல் நேரமாகும். ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியனுடைய தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவு காலமாகும். தேவர்களுக்கு மார்கழி முழுவதும் பிரம்ம முகூர்த்தம், ஆதலால் மாதங்களுள் சிறந்தது மார்கழி. இக்காலத்துக்குரிய பாடல்களாக திருவெம்பாவை திருவண்ணாமலையிலேயே மணிவாசகரால் பாடப்பெற்றது. பரபோதம் பெற்று எழுந்திருக்க இது ஓதப்படுவது சிறந்ததாகும்.
திருவெம்பாவை பாடப் பெற்ற வரலாற்றை நோக்கின், திருவாதவூரடிகள் என்றழைக்கப்பெற்ற மணிவாசகப் பெருமான், திருப்பெருந்துறையிலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து, அங்கு தங்கியிருந்தபோது, மார்கழி மாதத்திலே பாவை நோன்பு நோற்கும் கன்னியர் அதிகாலையில் எழுந்து எம்பெருமானைப் பாடி தம் தோழியரைத் துயில் எழுப்பி நீராடச் செல்லும் காட்சியைக் கண்ட அடிகளார், தம்மையும் அக்கன்னியருள் ஒருத்தியாகப் பாவனை செய்து அவர்கள் பாடுவதாகப் பாடியருளிய பாடல்களே திருவெம்பாவையாகும்.
தேவியின் திருநடனமாகத் தொடங்கிய வாழ்க்கை முறை, அம்பலக்கூத்தனுடைய ஆடலிலே முற்றுப் பெறுகின்றது. முற்பகுதியில், ஆடும் தெய்வமாக இருந்தவள் அம்பிகை. பிற்பகுதியில் ஆடும் தெய்வமாக இருப்பவன் ஈசன், சித் ஆகாசம் அல்லது அறிவு வெளி, ஐயனுக்கு ஆடும் இடமாகின்றது. சித் அம்பரம், சித்சபை என்றும் அழைக்கப்படுகின்றது. அங்கிருந்து கிளம்பும் ஒளியை முன்னிட்டு அது கனகசபை என்னும் பெயரையும் பெறுகின்றது.
இறைவன் நடராஜ மூர்த்தத்தில் தன் திருக்கரத்திலே மானைப் பரித்திருக்கின்றார். மனித மனம் மான் போன்றது. ஓர் இடத்தில் நிலைத்திராது. துள்ளிக் குதித்து நொடிப் பொழுதில் வெவ்வேறு இடங்களுக்கு சென்றுவிட வல்லது. இத்தகைய மனதை அடக்கத் தெரிந்தவனே மகாயோகி. இந்த உண்மையை எம்பெருமான் தனது தாண்டவத்துள் அடக்கியுள்ளார்.
பிரபஞ்சத்தை சிருஷ்டிப்பதிலும் அதனை முறையாக இயங்க வைப்பதிலும் சிவமும் சக்தியும் பங்கு கொள்கின்றனர். பிரபஞ்சத்தை முறையாகச் செயற்படுத்துவதில் அவர்கள் ஆனந்தம் அடைகின்றனர். இந்த ஆனந்தத்தின் அறிகுறியே தாண்டவம் , தாண்டவத்தின் பெரும் பகுதியில் சிவமும் சக்தியும் ஒருவருக்கொருவர் நிகராயினர். ஆனால் ஊர்த்துவ தாண்டவம் என்னும் கடைசிப் பகுதியில் அம்பிகை ஈசனுக்கு நிகராய் அமையவில்லை. இந்நிலையில் சுத்த சிவம் ஒன்றே எஞ்சியுள்ளது. சக்தி தன் இயல்பை அங்கு இழந்து விடுகின்றாள்.
மார்கழி திருவெம்பாவை நாட்களிலே ஆலயங்களிலே திருவாசகம் அன்றி வேறு எதுவும் ஓதமாட்டார்கள். இறுதி நாளான திருவாதிரையன்று திருவெம்பாவை ஓதிய பின்னரே திருமுறை ஓத ஆரம்பிப்பர். திருவாதிரை நாள் பல சிறப்புக்களையுடையது. சித்திரைத் திருவாதிரையன்று தான் சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தைப் பாட ஆரம்பித்தார். இப்பெரு நூலுக்கு பொருள் கூறத் தொடங்கியதும் இத் திருவாதிரை நாளிலே தான். அது மட்டுமல்ல திருஞானசம்பந்தப் பெருமான் பூம்பாவையை உயிர்பெறச் செய்ததும் ஒரு திருவாதிரை தினத்திலே தான். அவர் திரு அவதாரம் செய்ததுவும் சித்திரைத் திருவாதிரைத் தினத்திலே தான்.
திருவாதிரை உற்சவ தரிசனம் ஆருத்ரா தரிசனம் எனவும் பெயர் பெறும். ஆருத்ரா என்ற பதம், நனைந்த பணித்த எனப்பொருள் பெறும். மார்கழி மாதம் பனி பொழிந்து கொண்டிருக்கும் மாதம். ஆதிரை விழாவின் போது நடேசப் பெருமானுக்கு இடம் பெறும் அபிடேகச் சிறப்பு நிகழ்வுக்கும் இது பொருந்தும்
“ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நற் தில்லைச் சீற்றம் பலத்தே தீயாகும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளை சிலம்ப
வார்கலைகள் ஆர்பரவம் செய்ய
அணிகுழல் மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனை
நீராடேலோர் எம்பாவாய்”
சிதம்பர தலத்திலே திருவாதிரைக்கு முதல் நாள் இரவு மூன்றாவது யாமம் தொட்டு சபாநாயகருக்கு திருமுழுக்கைப் பெருமுழுக்காக செய்வார்கள். பொழுது புலர்ந்ததும் தேர்த்திருவிழா இடம் பெறும். தேருக்கு சுவாமி புறப்படு முன் சுவாமி உள்வீதி வலம் வருவார். எம்பெருமானை நேர்முகமாகத் தரிசித்த வண்ணம் பின்காட்டியபடி மணிவாசகப் பெருமானும் வலம் வருவார். மணிவாசகர் இமைப் பொழுதும் ஈசனை மறக்காத உண்மையை சித்தரிப்பதாய் இக்காட்சி அமைந்திருக்கும். சிதம்பரத்திலே இக்காட்சியைக் கண்டு தரிசிக்கும் மெய்யடியார்கள் உண்மையில் பாக்கியம் பெற்றவர்கள்.
திருமதி. இராஜேஸ்வரி
ஜெகானந்தகுரு
பூவுலகிலுள்ள சகல உயிர்கட்கும் அருள் புரிய வேண்டி முழுமுதற் கடவுளை சிவபெருமான், கோயில் கொண்டருளிய சிவத்த லங்களுள் மிகச் சிறப்பு வாய்ந்தது சிதம்பரமாகும். இத்தலம் ஒரு காலத்திலே தில்லைக் காடாக இருந்த காரணத்தால் தில்லை வனம் என்றழைக்கப்பட்டது. இந்த ஷேத்திரத்திலே தான் புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதரும், ஆதிசேடனுடைய அவதாரமாகிய பதஞ்சலி மகா முனிவரும் கண்டு களிக்க நடராஜமூர்த்தி தனது திருநடனத்தை ஆடிக்காட்டினார் என்பதும் புராண வரலாறு. இத்திருநடனத்தின் மூலம், பஞ்ச கிருத்தியம் எனப்படும் ஐந்தொழில்களும் இடம் பெறுகின்றன. படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்பனவே ஐந்தொழில்களாம். பஞ்ச கிருத்தியமாம்.
“அவனின்றி ஓர் அணுவும் அசையாது” என்றவாறு இறைவனின் இத்திருநடனமே சகல உலகங்களையும் உயிர்களையும் இயங்க வைக்கின்றது. இயக்கியும் வருகின்றது. ஐந்தொழிலுக்கும் ஐம்பூதங்கட்கும் நெருங்கிய தொடர்புண்டு. பிருதுவியில் வியாபித்திருக்கும் பிரம்மதேவன் படைத்தல் தொழிலைப் புரிய, நீரில் வியாபித்திருக்கும்
நாராயண மூர்த்தி காத்தல் தொழிலைப் புரிய, புவனத்திலிருக்கும் நெருப்பு நிறத்தினரான உருத்திரமூர்த்தி அழித்தல் தொழிலைப் புரிய, வாயு புவனத்தில் இருக்கும் மகேஸ்வர மூர்த்தி மறைத்தல் தொழிலைப் புரிய, ஆகாயத்திலே உறையும் சதாசிவமூர்த்தி அருளல் தொழிலையும் செய்வர்.
இப்பஞ்ச கிருத்தியத் தொழிலை எம்பெருமானுடைய தூக்கிய திருவருடியுடனான நடராஜ வடிவத்திலே விளக்கின், இறைவனது ஒரு திருக்கரத்திலே உள்ள டமருகம் என்றழைக்கப்படும் உடுக்கு படைத்தல் தொழிலையும், “பயம் வேண்டாம்” என்னும் அர்த்தத்தில் இருக்கும் அபயகரம் காத்தல் தொழிலையும், அனல் ஏந்திய திருக்கரம் அழித்தல் தொழிலையும், தூக்கிய திருவடி அருளல் தொழிலையும், முயலகனை மிதிக்கும் திருப்பாதம், மறைத்தல் தொழிலையும், என ஐந்தொழில்களையும் சித்திரிக்கின்றது.
மார்கழி மாதத்து வளர்பிறையில் ஆறாம் நாள் தொடங்கி சிவனாலயங்களிலே விசேடமாக திருப்பள்ளி யெழுச்சியைத் தொடர்ந்து திருவெம்பாவை பாடப்படும். 10 ஆம் நாளன்று திருவாதிரையோடு கூடிய இத்தினத்திலே நடராஜப் பெருமானுக்கு விழா எடுக்கப்படும். திருவெம்பாவை மணிவாசகப் பெருமானால் பாடப்பெற்ற திருவாசகத்தின் ஒரு பகுதியாகும்.
தைமாதம் முதல் ஆனி மாதம் வரையில் ஆறு மாத காலம் சூரியனுடைய உத்தராயணம். தேவர்களுக்கு பகல் நேரமாகும். ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியனுடைய தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவு காலமாகும். தேவர்களுக்கு மார்கழி முழுவதும் பிரம்ம முகூர்த்தம், ஆதலால் மாதங்களுள் சிறந்தது மார்கழி. இக்காலத்துக்குரிய பாடல்களாக திருவெம்பாவை திருவண்ணாமலையிலேயே மணிவாசகரால் பாடப்பெற்றது. பரபோதம் பெற்று எழுந்திருக்க இது ஓதப்படுவது சிறந்ததாகும்.
திருவெம்பாவை பாடப் பெற்ற வரலாற்றை நோக்கின், திருவாதவூரடிகள் என்றழைக்கப்பெற்ற மணிவாசகப் பெருமான், திருப்பெருந்துறையிலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து, அங்கு தங்கியிருந்தபோது, மார்கழி மாதத்திலே பாவை நோன்பு நோற்கும் கன்னியர் அதிகாலையில் எழுந்து எம்பெருமானைப் பாடி தம் தோழியரைத் துயில் எழுப்பி நீராடச் செல்லும் காட்சியைக் கண்ட அடிகளார், தம்மையும் அக்கன்னியருள் ஒருத்தியாகப் பாவனை செய்து அவர்கள் பாடுவதாகப் பாடியருளிய பாடல்களே திருவெம்பாவையாகும்.
தேவியின் திருநடனமாகத் தொடங்கிய வாழ்க்கை முறை, அம்பலக்கூத்தனுடைய ஆடலிலே முற்றுப் பெறுகின்றது. முற்பகுதியில், ஆடும் தெய்வமாக இருந்தவள் அம்பிகை. பிற்பகுதியில் ஆடும் தெய்வமாக இருப்பவன் ஈசன், சித் ஆகாசம் அல்லது அறிவு வெளி, ஐயனுக்கு ஆடும் இடமாகின்றது. சித் அம்பரம், சித்சபை என்றும் அழைக்கப்படுகின்றது. அங்கிருந்து கிளம்பும் ஒளியை முன்னிட்டு அது கனகசபை என்னும் பெயரையும் பெறுகின்றது.
இறைவன் நடராஜ மூர்த்தத்தில் தன் திருக்கரத்திலே மானைப் பரித்திருக்கின்றார். மனித மனம் மான் போன்றது. ஓர் இடத்தில் நிலைத்திராது. துள்ளிக் குதித்து நொடிப் பொழுதில் வெவ்வேறு இடங்களுக்கு சென்றுவிட வல்லது. இத்தகைய மனதை அடக்கத் தெரிந்தவனே மகாயோகி. இந்த உண்மையை எம்பெருமான் தனது தாண்டவத்துள் அடக்கியுள்ளார்.
பிரபஞ்சத்தை சிருஷ்டிப்பதிலும் அதனை முறையாக இயங்க வைப்பதிலும் சிவமும் சக்தியும் பங்கு கொள்கின்றனர். பிரபஞ்சத்தை முறையாகச் செயற்படுத்துவதில் அவர்கள் ஆனந்தம் அடைகின்றனர். இந்த ஆனந்தத்தின் அறிகுறியே தாண்டவம் , தாண்டவத்தின் பெரும் பகுதியில் சிவமும் சக்தியும் ஒருவருக்கொருவர் நிகராயினர். ஆனால் ஊர்த்துவ தாண்டவம் என்னும் கடைசிப் பகுதியில் அம்பிகை ஈசனுக்கு நிகராய் அமையவில்லை. இந்நிலையில் சுத்த சிவம் ஒன்றே எஞ்சியுள்ளது. சக்தி தன் இயல்பை அங்கு இழந்து விடுகின்றாள்.
மார்கழி திருவெம்பாவை நாட்களிலே ஆலயங்களிலே திருவாசகம் அன்றி வேறு எதுவும் ஓதமாட்டார்கள். இறுதி நாளான திருவாதிரையன்று திருவெம்பாவை ஓதிய பின்னரே திருமுறை ஓத ஆரம்பிப்பர். திருவாதிரை நாள் பல சிறப்புக்களையுடையது. சித்திரைத் திருவாதிரையன்று தான் சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தைப் பாட ஆரம்பித்தார். இப்பெரு நூலுக்கு பொருள் கூறத் தொடங்கியதும் இத் திருவாதிரை நாளிலே தான். அது மட்டுமல்ல திருஞானசம்பந்தப் பெருமான் பூம்பாவையை உயிர்பெறச் செய்ததும் ஒரு திருவாதிரை தினத்திலே தான். அவர் திரு அவதாரம் செய்ததுவும் சித்திரைத் திருவாதிரைத் தினத்திலே தான்.
திருவாதிரை உற்சவ தரிசனம் ஆருத்ரா தரிசனம் எனவும் பெயர் பெறும். ஆருத்ரா என்ற பதம், நனைந்த பணித்த எனப்பொருள் பெறும். மார்கழி மாதம் பனி பொழிந்து கொண்டிருக்கும் மாதம். ஆதிரை விழாவின் போது நடேசப் பெருமானுக்கு இடம் பெறும் அபிடேகச் சிறப்பு நிகழ்வுக்கும் இது பொருந்தும்
“ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நற் தில்லைச் சீற்றம் பலத்தே தீயாகும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளை சிலம்ப
வார்கலைகள் ஆர்பரவம் செய்ய
அணிகுழல் மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனை
நீராடேலோர் எம்பாவாய்”
சிதம்பர தலத்திலே திருவாதிரைக்கு முதல் நாள் இரவு மூன்றாவது யாமம் தொட்டு சபாநாயகருக்கு திருமுழுக்கைப் பெருமுழுக்காக செய்வார்கள். பொழுது புலர்ந்ததும் தேர்த்திருவிழா இடம் பெறும். தேருக்கு சுவாமி புறப்படு முன் சுவாமி உள்வீதி வலம் வருவார். எம்பெருமானை நேர்முகமாகத் தரிசித்த வண்ணம் பின்காட்டியபடி மணிவாசகப் பெருமானும் வலம் வருவார். மணிவாசகர் இமைப் பொழுதும் ஈசனை மறக்காத உண்மையை சித்தரிப்பதாய் இக்காட்சி அமைந்திருக்கும். சிதம்பரத்திலே இக்காட்சியைக் கண்டு தரிசிக்கும் மெய்யடியார்கள் உண்மையில் பாக்கியம் பெற்றவர்கள்.
திருமதி. இராஜேஸ்வரி
ஜெகானந்தகுரு
COMMENTS