தில்லைக் கூத்­த­னுக்கு உகந்த திரு­வா­தி­ரையும் திருவெம்­பா­வையும்!

SHARE:

தில்லைக் கூத்­த­னுக்கு உகந்த திரு­வா­தி­ரையும் திரு எம்­பா­வையும் நட்­சத்­தி­ரங் கள் இரு­பத்­தேழில் “திரு” எண்ணும் சிறப்பு அடை­மொ­ழியைக் கொண்­டுள்ள இரு நட்­சத்­தி­ரங்கள் ஆவன. ஒன்று திரு­வா­திரை மற் ­றொன்று திரு­வோணம்.திரு­வா­திரை சிவ­னா­ருக்­கு­ரி­யது. திரு­வோணம் விஷ்­ணு­ப­க­வா­னுக்­கு­ரி­யது. எம்­பெ­ரு­மா­னுக்கு திரு­எம்­பா­வையும் திருப்­பள்ளி எழுச்­சியும் பாடிப்­ப­ர­வ­ச­ம­டைய உகந்த காலம் மார்­கழி மாதம். இம் மாதம் தேவர்­க­ளுக்கு உதய கால­மாகும். மார்­கழித் திரு­வா­தி­ரை­யன்று ஈசன் ஆனந்தக் கூத்து ஆடி­யமை புராண வர­லாறு. இதற்­கு­ரிய புனித தலம், தில்லைச் சிதம்­பரம், இத்­தி­ரு­ந­ட­னத்துள் பல தத்­து­வங்கள் அடங்­கி­யுள்­ளன. இனி, தில்­லைத்­தலம் பற்றி நோக்­குவோம்.

பூவு­ல­கி­லுள்ள சகல உயிர்­கட்கும் அருள் புரிய வேண்டி முழு­முதற் கட­வுளை சிவ­பெ­ருமான், கோயில் கொண்­ட­ரு­ளிய சிவத்­த லங்­களுள் மிகச் சிறப்பு வாய்ந்­தது சிதம்­ப­ர­மாகும். இத்­தலம் ஒரு காலத்­திலே தில்லைக் காடாக இருந்த கார­ணத்தால் தில்லை வனம் என்­ற­ழைக்­கப்­பட்­டது. இந்த ஷேத்­தி­ரத்­திலே தான் புலிக்கால் முனி­வ­ரா­கிய வியாக்­கி­ர­பா­தரும், ஆதி­சே­ட­னு­டைய அவ­தா­ர­மா­கிய பதஞ்­சலி மகா முனி­வரும் கண்டு களிக்க நட­ரா­ஜ­மூர்த்தி தனது திரு­ந­ட­னத்தை ஆடிக்­காட்­டினார் என்­பதும் புராண வர­லாறு. இத்­தி­ரு­ந­ட­னத்தின் மூலம், பஞ்ச கிருத்­தியம் எனப்­படும் ஐந்­தொ­ழில்­களும் இடம் பெறு­கின்­றன. படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்­ப­னவே ஐந்­தொ­ழில்­களாம். பஞ்ச கிருத்­தி­யமாம்.

“அவ­னின்றி ஓர் அணுவும் அசை­யாது” என்­ற­வாறு இறை­வனின் இத்­தி­ரு­ந­ட­னமே சகல உல­கங்­க­ளையும் உயிர்­க­ளையும் இயங்க வைக்­கின்­றது. இயக்­கியும் வரு­கின்­றது. ஐந்­தொ­ழி­லுக்கும் ஐம்­பூ­தங்­கட்கும் நெருங்­கிய தொடர்­புண்டு. பிரு­து­வியில் வியா­பித்­தி­ருக்கும் பிரம்­ம­தேவன் படைத்தல் தொழிலைப் புரிய, நீரில் வியா­பித்­தி­ருக்கும்

நாரா­யண மூர்த்தி காத்தல் தொழிலைப் புரிய, புவ­னத்­தி­லி­ருக்கும் நெருப்பு நிறத்­தி­ன­ரான உருத்­தி­ர­மூர்த்தி அழித்தல் தொழிலைப் புரிய, வாயு புவ­னத்தில் இருக்கும் மகேஸ்­வர மூர்த்தி மறைத்தல் தொழிலைப் புரிய, ஆகா­யத்­திலே உறையும் சதா­சி­வ­மூர்த்தி அருளல் தொழி­லையும் செய்வர்.

இப்­பஞ்ச கிருத்­தியத் தொழிலை எம்­பெ­ரு­மா­னு­டைய தூக்­கிய திரு­வ­ரு­டி­யு­ட­னான நட­ராஜ வடி­வத்­திலே விளக்கின், இறை­வ­னது ஒரு திருக்­க­ரத்­திலே உள்ள டம­ருகம் என்­ற­ழைக்­கப்­படும் உடுக்கு படைத்தல் தொழி­லையும், “பயம் வேண்டாம்” என்னும் அர்த்­தத்தில் இருக்கும் அப­ய­கரம் காத்தல் தொழி­லையும், அனல் ஏந்­திய திருக்­கரம் அழித்தல் தொழி­லையும், தூக்­கிய திரு­வடி அருளல் தொழி­லையும், முய­ல­கனை மிதிக்கும் திருப்­பாதம், மறைத்தல் தொழி­லையும், என ஐந்­தொ­ழில்­க­ளையும் சித்­தி­ரிக்­கின்­றது.

மார்­கழி மாதத்து வளர்­பி­றையில் ஆறாம் நாள் தொடங்கி சிவ­னா­ல­யங்­க­ளிலே விசே­ட­மாக திருப்­பள்ளி யெழுச்­சியைத் தொடர்ந்து திரு­வெம்­பாவை பாடப்­படும். 10 ஆம் நாளன்று திரு­வா­தி­ரை­யோடு கூடிய இத்­தி­னத்­திலே நட­ராஜப் பெரு­மா­னுக்கு விழா எடுக்­கப்­படும். திரு­வெம்­பாவை மணி­வா­சகப் பெரு­மானால் பாடப்­பெற்ற திரு­வா­ச­கத்தின் ஒரு பகு­தி­யாகும்.

தைமாதம் முதல் ஆனி மாதம் வரையில் ஆறு மாத காலம் சூரி­ய­னு­டைய உத்­த­ரா­யணம். தேவர்­க­ளுக்கு பகல் நேர­மாகும். ஆடி மாதம் முதல் மார்­கழி வரை சூரி­ய­னு­டைய தட்­சி­ணா­யனம் தேவர்­க­ளுக்கு இரவு கால­மாகும். தேவர்­க­ளுக்கு மார்­கழி முழு­வதும் பிரம்ம முகூர்த்தம், ஆதலால் மாதங்­களுள் சிறந்­தது மார்­கழி. இக்­கா­லத்­துக்­கு­ரிய பாடல்­க­ளாக திரு­வெம்­பாவை திருவண்­ணா­ம­லை­யி­லேயே மணி­வா­ச­கரால் பாடப்­பெற்­றது. பர­போதம் பெற்று எழுந்­தி­ருக்க இது ஓதப்­ப­டு­வது சிறந்­த­தாகும்.

திரு­வெம்­பாவை பாடப் பெற்ற வர­லாற்றை நோக்கின், திரு­வா­த­வூ­ர­டிகள் என்­ற­ழைக்­கப்­பெற்ற மணி­வா­சகப் பெருமான், திருப்­பெ­ருந்­து­றை­யி­லி­ருந்து புறப்­பட்டு திரு­வண்­ணா­ம­லைக்குச் சென்று சுவாமி தரி­சனம் செய்து, அங்கு தங்­கி­யி­ருந்­த­போது, மார்­கழி மாதத்­திலே பாவை நோன்பு நோற்கும் கன்­னியர் அதி­கா­லையில் எழுந்து எம்­பெ­ரு­மானைப் பாடி தம் தோழி­யரைத் துயில் எழுப்பி நீராடச் செல்லும் காட்­சியைக் கண்ட அடி­களார், தம்­மையும் அக்­கன்­னி­யருள் ஒருத்­தி­யாகப் பாவனை செய்து அவர்கள் பாடு­வ­தாகப் பாடி­ய­ரு­ளிய பாடல்­களே திரு­வெம்­பா­வை­யாகும்.

தேவியின் திரு­ந­ட­ன­மாகத் தொடங்­கிய வாழ்க்கை முறை, அம்­ப­லக்­கூத்­த­னு­டைய ஆட­லிலே முற்றுப் பெறு­கின்­றது. முற்­ப­கு­தியில், ஆடும் தெய்­வ­மாக இருந்­தவள் அம்­பிகை. பிற்­ப­கு­தியில் ஆடும் தெய்­வ­மாக இருப்­பவன் ஈசன், சித் ஆகாசம் அல்­லது அறிவு வெளி, ஐய­னுக்கு ஆடும் இட­மா­கின்­றது. சித் அம்­பரம், சித்­சபை என்றும் அழைக்­கப்­ப­டு­கின்­றது. அங்­கி­ருந்து கிளம்பும் ஒளியை முன்­னிட்டு அது கன­க­சபை என்னும் பெய­ரையும் பெறு­கின்­றது.

இறைவன் நட­ராஜ மூர்த்­தத்தில் தன் திருக்­க­ரத்­திலே மானைப் பரித்­தி­ருக்­கின்றார். மனித மனம் மான் போன்­றது. ஓர் இடத்தில் நிலைத்­தி­ராது. துள்ளிக் குதித்து நொடிப் பொழுதில் வெவ்­வேறு இடங்­க­ளுக்கு சென்­று­விட வல்­லது. இத்­த­கைய மனதை அடக்கத் தெரிந்­த­வனே மகா­யோகி. இந்த உண்­மையை எம்­பெ­ருமான் தனது தாண்­ட­வத்துள் அடக்­கி­யுள்ளார்.

பிர­பஞ்­சத்தை சிருஷ்­டிப்­ப­திலும் அதனை முறை­யாக இயங்க வைப்­ப­திலும் சிவமும் சக்­தியும் பங்கு கொள்­கின்­றனர். பிர­பஞ்­சத்தை முறை­யாகச் செயற்­ப­டுத்­து­வதில் அவர்கள் ஆனந்தம் அடை­கின்­றனர். இந்த ஆனந்­தத்தின் அறி­கு­றியே தாண்­டவம் , தாண்­ட­வத்தின் பெரும் பகு­தியில் சிவமும் சக்­தியும் ஒரு­வ­ருக்­கொ­ருவர் நிக­ரா­யினர். ஆனால் ஊர்த்­துவ தாண்­டவம் என்னும் கடைசிப் பகு­தியில் அம்­பிகை ஈச­னுக்கு நிகராய் அமை­ய­வில்லை. இந்­நி­லையில் சுத்த சிவம் ஒன்றே எஞ்­சி­யுள்­ளது. சக்தி தன் இயல்பை அங்கு இழந்து விடு­கின்றாள்.

மார்­கழி திரு­வெம்­பாவை நாட்­க­ளிலே ஆல­யங்­க­ளிலே திரு­வா­சகம் அன்றி வேறு எதுவும் ஓத­மாட்­டார்கள். இறுதி நாளான திரு­வா­தி­ரை­யன்று திரு­வெம்­பாவை ஓதிய பின்­னரே திரு­முறை ஓத ஆரம்­பிப்பர். திரு­வா­திரை நாள் பல சிறப்­புக்­க­ளை­யு­டை­யது. சித்­திரைத் திரு­வா­தி­ரை­யன்று தான் சேக்­கிழார் பெருமான் பெரிய புரா­ணத்தைப் பாட ஆரம்­பித்தார். இப்­பெரு நூலுக்கு பொருள் கூறத் தொடங்­கி­யதும் இத் திரு­வா­திரை நாளிலே தான். அது மட்­டு­மல்ல திரு­ஞா­ன­சம்­பந்தப் பெருமான் பூம்­பா­வையை உயிர்­பெறச் செய்­ததும் ஒரு திரு­வா­திரை தினத்­திலே தான். அவர் திரு அவ­தாரம் செய்­த­துவும் சித்­திரைத் திரு­வா­திரைத் தினத்­திலே தான்.

திரு­வா­திரை உற்­சவ தரி­சனம் ஆருத்ரா தரி­சனம் எனவும் பெயர் பெறும். ஆருத்ரா என்ற பதம், நனைந்த பணித்த எனப்­பொருள் பெறும். மார்­கழி மாதம் பனி பொழிந்து கொண்­டி­ருக்கும் மாதம். ஆதிரை விழாவின் போது நடேசப் பெரு­மா­னுக்கு இடம் பெறும் அபி­டேகச் சிறப்பு நிகழ்­வுக்கும் இது பொருந்தும்


“ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்­தாடும்

தீர்த்தன் நற் தில்லைச் சீற்றம் பலத்தே தீயாகும்

கூத்தன் இவ்­வானும் குவ­ல­யமும் எல்­லோமும்

காத்தும் படைத்தும் கரந்தும் விளை­யாடி

வார்த்­தையும் பேசி வளை சிலம்ப

வார்­க­லைகள் ஆர்­ப­ரவம் செய்ய

அணி­குழல் மேல் வண்­டார்ப்ப

பூத்­தி­கழும் பொய்கை குடைந்­து­டையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனை

நீராடேலோர் எம்பாவாய்”


சிதம்பர தலத்திலே திருவாதிரைக்கு முதல் நாள் இரவு மூன்றாவது யாமம் தொட்டு சபாநாயகருக்கு திருமுழுக்கைப் பெருமுழுக்காக செய்வார்கள். பொழுது புலர்ந்ததும் தேர்த்திருவிழா இடம் பெறும். தேருக்கு சுவாமி புறப்படு முன் சுவாமி உள்வீதி வலம் வருவார். எம்பெருமானை நேர்முகமாகத் தரிசித்த வண்ணம் பின்காட்டியபடி மணிவாசகப் பெருமானும் வலம் வருவார். மணிவாசகர் இமைப் பொழுதும் ஈசனை மறக்காத உண்மையை சித்தரிப்பதாய் இக்காட்சி அமைந்திருக்கும். சிதம்பரத்திலே இக்காட்சியைக் கண்டு தரிசிக்கும் மெய்யடியார்கள் உண்மையில் பாக்கியம் பெற்றவர்கள்.


திருமதி. இராஜேஸ்வரி
ஜெகானந்தகுரு

COMMENTS

Name

Bakthi,12,
ltr
item
Bakthi.net: தில்லைக் கூத்­த­னுக்கு உகந்த திரு­வா­தி­ரையும் திருவெம்­பா­வையும்!
தில்லைக் கூத்­த­னுக்கு உகந்த திரு­வா­தி­ரையும் திருவெம்­பா­வையும்!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXsGrNycScYcSNWkzKdnp6-gWYr-DdhDrKVmJ5YGw5Ho7_v_pOUqM7qDuRYy81EZagWUPNTVACeIiNdeQTfTX43OYSAVZUQQJt5s6TingrPa3L2WkcCVWItK6VEp88VbnOz54pE5WHnrs/s640/%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AF%258D+%25E0%25AE%2595%25E0%25AF%2582%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25C2%25AD%25E0%25AE%25A4%25C2%25AD%25E0%25AE%25A9%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581+%25E0%25AE%2589%25E0%25AE%2595%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4+%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25C2%25AD%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25C2%25AD%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25C2%25AD%25E0%25AE%25B0%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D+%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AF%2586%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25C2%25AD%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25C2%25AD%25E0%25AE%25B5%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2521.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXsGrNycScYcSNWkzKdnp6-gWYr-DdhDrKVmJ5YGw5Ho7_v_pOUqM7qDuRYy81EZagWUPNTVACeIiNdeQTfTX43OYSAVZUQQJt5s6TingrPa3L2WkcCVWItK6VEp88VbnOz54pE5WHnrs/s72-c/%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AF%258D+%25E0%25AE%2595%25E0%25AF%2582%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25C2%25AD%25E0%25AE%25A4%25C2%25AD%25E0%25AE%25A9%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581+%25E0%25AE%2589%25E0%25AE%2595%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4+%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25C2%25AD%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25C2%25AD%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25C2%25AD%25E0%25AE%25B0%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D+%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AF%2586%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25C2%25AD%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25C2%25AD%25E0%25AE%25B5%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2521.jpg
Bakthi.net
https://www.bakthi.net/2020/01/blog-post_4.html
https://www.bakthi.net/
https://www.bakthi.net/
https://www.bakthi.net/2020/01/blog-post_4.html
true
6253798714521946289
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy